ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இது ஒரு முக்கியமான சாதனை என்று கூறிய பிரதமர், 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். இந்தியாவின் இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த அசாதாரண விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது நமது பெண் வீராங்கனைகளின் அசாத்திய மனப்பான்மைக்கு சான்றாகும் என்றும், இந்த வெற்றியால் இந்தியா பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
கூட்டு வில்வித்தையில் மூன்றாவது தங்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஆடவருக்கான கூட்டு வில்வித்தையில் தங்கம் வென்றதற்காக ஓஜஸ் பிரவீன் தியோடலே ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.அவர்களின் அர்ப்பணிப்பு, திறமை, துல்லியம், உறுதிப்பாடு மற்றும் அசையாத கவனம் ஆகியவை நாட்டைப் பெருமைப்படுத்துகின்றன என்று மோடி கூறினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் வில்வித்தை ஆடவர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மா ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.